SPB பாடிய தாலாட்டு !
பாடல்: இது குழந்தை பாடும் தாலாட்டு
படம்: ஒருதலை ராகம்
பாடியவர்: பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர்: T ராஜேந்தர்
இப்படத்தை அண்ணாசாலை அலங்கார் திரையரங்கில் பார்த்ததாக நினைவு ! படத்தில் டூயட் பாடல்கள் கிடையாது, எல்லாமே ஆண் மட்டுமே பாடும் பாடல்கள். அலங்கார் இப்போது இல்லை !
ஒருதலைக் காதலை, அழகான இசையுடன் கூடிய எளிமையான பாடல் வரிகளில், வெளிப்படுத்தியிருப்பது அருமை. வீணையை ஒரு திரைப்பாடலில் இவ்வளவு நேர்த்தியாக கையாண்டிருப்பது கூடுதல் அருமை !
இப்பாடலை எப்போதும் கேட்டாலும் சுகானுபவம் தான். இதில் 'உறவுறுவாள்', 'உறவுறாத' என்ற சொற்கள் அழகாக எடுத்தாளப்பட்டுள்ளன என்பது என் கருத்து. பாடல் வரிகள் கீழே:
இது குழந்தை பாடும் தாலாட்டு..!
இது இரவு நேர பூபாளம்..!
இது மேற்கில் தோன்றும் உதயம்..!
இது நதியில்லாத ஓடம்..!
(இது குழந்தை பாடும்..)
நடை மறந்த கால்கள் தன்னின்
தடயத்தைப் பார்க்கிறேன்..
வடமிழந்த தேரது ஒன்றை
நாள் தோறும் இழுக்கிறேன்..
சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்...
உறவுறாத பெண்ணை எண்ணி
நாளெல்லாம் வாழ்கிறேன்...
(இது குழந்தை பாடும்..)
வெறும் நாரில் கரம் கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்..
வெறும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்..
விடிந்துவிட்ட பொழுதில் கூட
விண் மீனைப் பார்க்கிறேன்...
விருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்..
(இது குழந்தை பாடும்..)
உளமறிந்த பின் தானோ
அவளை நான் நினைத்தது..!
உறவுறுவாள் என தானோ
மனதை நான் கொடுத்தது..!
உயிரிழந்த கருவைக் கொண்டு
கவிதை நான் வடிப்பது..
ஒரு தலையாய் காதலிலே
எத்தனை நாள் வாழ்வது..!
(இது குழந்தை பாடும்..)
என்றென்றும் அன்புடன்
பாலா
2 மறுமொழிகள்:
One of the best of songs of SPB and best lyrics of TR
v.sridhar
Thanks, Sridhar !
Post a Comment